செம்மரக்கட்டைகள் கடத்தல் - லாரி ஓட்டுநர் கைது
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த லாரி ஓட்டுநரை சித்தூர் போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த லாரி ஓட்டுநரை சித்தூர் போலீசார் கைது செய்தனர். பாக்லா அருகில் சித்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு லாரி நிற்காமல் வேகமாக சென்றது. இதனையடுத்து போலீசார் அந்த லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அந்த லாரியில் சுமார் 2 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து லாரி ஓட்டுநர் பிரபுவை கைது செய்த போலீசார் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஓட்டுநர் பிரபு வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.