தேசிய மகளிர் ஆணையம் கேரள முதல்வருக்கு கடிதம்...
கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிஷப் பிராங்ஃகோ முல்லகல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிஷப் பிராங்ஃகோ முல்லகல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. முல்லகல் தற்போது ஜாமினில் வெளியே இருப்பதால், சாட்சி விசாரணைகளுக்கான ஆதாரங்களை அழிப்பதற்கு முயற்சி செய்யக்கூடும் என்றும், அதனால் தடுப்பு நடவடிக்கையாக அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது.