முதல் 50 இடங்களில் இந்தியா வர இலக்கு : குஜராத் மாநாட்டில், பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை

எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில், முதல் 50 இடங்களில் இந்தியாவை இடம் பெறச்செய்வதே மத்திய அரசின் இலக்கு என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-18 13:49 GMT
எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில், முதல் 50 இடங்களில் இந்தியாவை இடம் பெறச்செய்வதே மத்திய அரசின் இலக்கு என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், உலக வங்கியின் அட்டவணை படி, இந்தியா தற்போது 77 வது இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டினார். எனவே, நமது இலக்கு விரைவில் எட்டப்படும் என பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்தார். சீர்திருத்தம் - செயல்பாடு - புத்தாக்கம் - மீண்டும் செயல்பாடு என்ற தாரக மந்திரத்தை முன்வைத்து, அரசு நிர்வாகம் செயலாற்றி வருவதாகவும் பிரதமர் நரேந்திரமோடி கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்