குஜராத் தலைமை செயலகத்துக்குள் நுழைந்த சிறுத்தை

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தலைமைச் செயலகத்துக்குள் சிறுத்தை ஒன்று இன்று காலை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-05 06:45 GMT
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தலைமைச் செயலகத்துக்குள் சிறுத்தை ஒன்று, இன்று காலை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தலைமைச் செயலக  நுழைவு  வாயில் கேட் வழியே லாவகமாக நுழைந்த அந்த  சிறுத்தை அங்கு பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று தலைமை செயலகத்துக்கு வந்த அரசு ஊழியர்கள் மத்தியில் பதற்றம் நிலவியது. 

பிடிபட்ட  சிறுத்தை :

இந்நிலையில், வனத்துறையினர் வந்து, தலைமை செயலக வளாக​த்து​க்​குள் பதுங்கி இருந்த சிறுத்தையை பிடித்துச் சென்றனர். அதன்பிறகே, தலைமை செயலக ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்