நாளை மறுநாள் சபரிமலை நடைதிறப்பு

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள் திறக்கப்படுகிறது.

Update: 2018-11-03 05:58 GMT
ஐப்பசி மாத பூஜைகளுக்குப் பின்னர் கடந்த 22-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான சித்திரை திருநாள் பாலராமவர்மாவின் பிறந்தநாள் வரும் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடைசி மன்னரின் பிறந்தநாளையொட்டி வருடம்தோறும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 6ம் தேதி இரவு நடை சாத்தப்படுகிறது. இதனையடுத்து 2 ஆயிரம் போலீசார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  வழக்கமாக மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் மட்டும்தான் அதிகளவில் போலீசார் குவிக்கப்படுவார்கள். ஆனால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று நீதிமற்ற தீர்ப்புக்கு பிறகு, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக முதன் முறையாக குறுகிய கால நடைதிறப்புக்கு அதிக எண்ணிக்கையில் போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். மீண்டும் மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் நவ. 6-ம் தேதி வரை பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்