திருமணம் நடக்க விருந்த நிலையில் கார் மோதி பெண் மென்பொறியாளர் உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து.
ஹைதராபாத் அருகே ரச்சகோனா பகுதியில் கார் மோதி பெண் வினுஷா என்ற மென் பொறியாளர் உயிரிழந்தார். அவருக்கு விரைவில் திருமணம் நடக்க விருந்த நிலையில் நிச்சயிக்கப்பட்டவருடன் கோயிலுக்கு சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி இருவரும் விழுந்த போது பின்னால் வந்த கார் வினுஷா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.