"என் பெயர் ஜனனி, வயது ஒன்பது" - சபரிமலைக்கு அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி
சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு 4வது நாளான இன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு 4வது நாளான இன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். மதுரையை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி இருமுடி கட்டிக்கொண்டு இன்று சபரிமலை சென்றுள்ளார். தனது கையில் அறிவிப்பு பதாகை ஒன்றை அந்த சிறுமி வைத்துள்ளார். தற்போது தனக்கு ஒன்பது வயது என்றும், 50 வயது கடந்த பிறகே தாம் அடுத்த முறை சபரிமலைக்கு வருவேன் என்றும் அந்த அறிவிப்பு பதாகையில் இடம்பெற்றுள்ளது.