போக்குவரத்து காவலரை தாக்கிய வழக்கறிஞர் - குடிபோதையில் நடுரோட்டில் நடந்த சம்பவம்

கர்நாடகாவில் குடிபோதையில் போக்குவரத்து காவலரை வழக்கறிஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-10-11 03:43 GMT
கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் போக்குவரத்து காவலர்கள் லிங்கப்பா மற்றும் சரத் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை நிறுத்தி சோதனையிட்டதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரிடம் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அந்த நபர் கீழே கிடந்த கல்லை எடுத்து போலீசாரை கண்மூடித் தனமாக தாக்கியுள்ளார். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்