சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: ஆளுநர் மாளிகை நோக்கி பிரார்த்தனை பேரணி

சபரிமலை அய்யப்பன்கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Update: 2018-10-09 07:20 GMT
சபரிமலை அய்யப்பன்கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த உத்தரவுக்கு மறு ஆய்வு மனு தாக்கல் செய்யுமாறு கேரள அரசை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள ஆளுநர் மாளிகையை நோக்கி அய்யப்ப பக்தர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, பிரார்த்தனை கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்