ஐயப்பனுக்கு திருவாபரணம் வழங்குவதில்லை என பரவும் தகவலுக்கு பந்தள அரண்மனை மறுப்பு

சபரிமலையில் அய்யப்பனுக்கு திருவாபரணத்தை வழங்குவதில்லை என பரவும் தகவலுக்கும் பந்தள அரண்மனை மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2018-10-01 19:42 GMT
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு திருவாபரணங்களை பந்தளம் அரண்மனையில் இருந்து அணிவிப்பது வழக்கம். தற்போது, சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் உத்தரவு வெளியான நிலையில், இனிமேல் திருவாபரணங்களை அனுப்பப்பபோவதில்லை என பந்தளம் அரண்மனை சார்பாக கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சமூக ஊடகங்களில் இந்த தகவல் வேகமாக பரவி வரும் நிலையில், பந்தளம் அரண்மனை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாபரணம் உள்ளிட்ட ஐதீகங்களை புறக்கணிக்கும் முடிவு எதையும் எடுக்கவில்லை எனவும் இதுபோன்ற பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பந்தளம் அரண்மனை அறிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்