நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க குஜராத் சென்றடைந்தார் மோடி

பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க இன்று ஒரு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார்.

Update: 2018-09-30 09:03 GMT
பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க இன்று ஒரு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். ஆனந்த் மாவட்டத்தில் உள்ள அமுல் நிறுவனத்தின் அதிநவீன சாக்லெட் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அவர்,  முஜ்குவா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி கூட்டுறவு நிறுவனம், பொதுவீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் ராஜ்கோட்டில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் மோடி, இன்று ஆனந்த் மற்றும் காட்ராஜ் என இரண்டு பொது கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்