தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார் குடியரசு துணை தலைவர்

டெல்லியில் நடந்த விழாவில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கினார்.

Update: 2018-09-05 11:27 GMT
தேசிய அளவில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்ப ட்ட 45  பேர்களுக்கு டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார். தமிழகத்தில் இருந்து விருதுக்கு தேர்வான அரசு பள்ளி ஆசிரியை ஸதி உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடு முழுவதும் இருந்து விருதுக்காக 150 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதில் இருந்து 45 ஆசிரியர்களை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்