கேரளாவில் இயல்பு நிலை திரும்பியது : பேருந்து,ரயில் போக்குவரத்து துவக்கம்

கேரளாவில் இயல்பு நிலை படிப்படியாக திரும்புவதால்,பல இடங்களில் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து துவங்கியுள்ளது.

Update: 2018-08-21 03:33 GMT
கேரளாவில் இயல்பு நிலை படிப்படியாக திரும்புவதால்,பல இடங்களில் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து துவங்கியுள்ளது. நிலைமை சீரடைந்து வரும் பகுதிகளில்,மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.கொச்சி விமான நிலையம் மூடப்பட்டு விட்டபோதிலும், மாற்று ஏற்பாடாக கடற்படை தளத்தில்,முதல் பயணிகள் விமானம் தரையிறங்கியது.ராணுவம்,கடற்படை,விமானப்படை,தேசிய பேரிடர் மீட்பு குழு,கடலோர காவல்படை,துணை ராணுவப்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மற்றொரு பக்கம் நிவாரணப்பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்