நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற மீண்டும் கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரியில் கடந்த இரண்டாம் தேதி, தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற இன்று காலை பேரவை மீண்டும் கூடியது.
புதுச்சேரியில் கடந்த இரண்டாம் தேதி, தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற இன்று காலை பேரவை மீண்டும் கூடியது.. 3 நியமன உறுப்பினர்களையும்
பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் ஆளுநர் கிரண்பேடி நிதி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பேரவை செயலர் வின்சென்ட்ராயர் அழைப்பை ஏற்று பாஜகவைச்சேர்ந்த நியமன எம்.எல் ஏ க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய பேரவை வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் சபாநாயகர் வைத்தியலிங்கம், முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரின் அறைக்கு சென்று சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் அவர்கள் பேரவை நடவடிக்கையில் பங்கேற்றனர் .
அவர்களுக்கு அதிமுக வினருக்கு அடுத்து இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிதி மசோதா நிறைவேற்றப் பட்டது.