காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் திருட்டு - சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்
சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள வடசேரி காசிவிஸ்வநாதர் கோவிலில் நேற்று இரவு மர்மநபர் ஒருவர் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார். கோவில் பூட்டை மர்மநபர் ஒருவர் இரும்பு கம்பியால் உடைக்கும் காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.