சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கினார் சுகாதாரத்துறை அமைச்சர்
சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,
சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு விருது, மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
மருத்துவத்துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது என பெருமிதம் தெரிவித்தார். சமூகவலைத்தளங்கள் மூலம் தவறாம தகவல்கள் மக்களிடையே அதிகமாக பரப்பப்படுவதாகவும், மக்களின் பயத்தை போக்க மருத்துவர்கள் அறிவியல் ரீதியான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.