அரசுக்கு மிக அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய ஊழியர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் - செளந்தரராஜன், சிஐடியூ தொழிற்சங்கம்

அரசுக்கு மிக அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய ஊழியர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் என சிஐடியூ தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செளந்தரராஜன் கூறியுள்ளார்

Update: 2018-06-28 10:54 GMT
அரசுக்கு மிக அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய ஊழியர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் - செளந்தரராஜன்



டாஸ்மாக்  ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து தலைமைச்செயலகம் வரை  நடைபெற்ற இந்த பேரணியில் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியூ தொழிற்சங்க,  மாநில பொதுச்செயலாளர் செளந்தரராஜன், பணி நிரந்தரம் வழங்க வேண்டும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தார். 


Tags:    

மேலும் செய்திகள்