மலைப்பாதையில் தொடரும் விபத்துகளை தடுக்க தடுப்புசுவர் அமைக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில், மலைப்பாதைகளில் தொடரும் விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Update: 2018-06-15 16:04 GMT
மலைப்பாதையில் தொடரும் விபத்துகளை தடுக்க தடுப்புசுவர் அமைக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் உதகை நகருக்கு செல்லும் முக்கிய பாதை, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை. நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், போதிய அளவில் தடுப்புசுவர், எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால், ஆபத்தமான இந்த மலைபாதையில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்தநிலையை மாற்ற தேவையான இடங்களில் தடுப்புசுவர், எச்சரிக்கை பலகை போன்றவற்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு குன்னூர் அரசு மருத்துவமனையிலேயே உயர்தர சிகிச்சை அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்