நடிகை திரிஷா மீது இந்து அமைப்பினர் புகார் - படப்பிடிப்பில் சிவலிங்கத்தை அவமதித்ததாக புகார்

சிவலிங்கத்தை அவமதித்ததாக நடிகை திரிஷா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-04 14:33 GMT
சிவலிங்கத்தை அவமதித்ததாக நடிகை திரிஷா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலம் ஹரிகேஷ்வரில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள, நர்மதா நதியோரம் உள்ள சிவாலயத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில், நடிகை திரிஷா செருப்பு காலுடன் நடந்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், த்ரிஷா மற்றும் மணிரத்னத்தை கைது செய்ய கோரி ஹரிகேஷ்வர் பகுதியை சேர்ந்த இந்து அமைப்புகள் புகார் அளித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்