நடிகர் சிம்பு பாம்பை துன்புறுத்தியதாக புகார்

நடிகர் சிம்பு பாம்பை துன்புறுத்தியதாக வனத்துறையினரிடம் வன விலங்கு நல ஆர்வலர் புகார் அளித்து உள்ளார்.

Update: 2020-11-04 05:11 GMT
நடிகர் சிம்பு பாம்பை துன்புறுத்தியதாக வனத்துறையினரிடம் வன விலங்கு நல ஆர்வலர் புகார் அளித்து உள்ளார். நடிகர் சிம்பு புதிதாக நடித்து வரும் ஈஸ்வரன் படத்தில் மரத்திலிருந்து பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் போடும் காட்சி இடம்பெற்றுள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில், வன விலங்கு நல ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், சிம்பு பாம்பை துன்புறுத்தியதாகவும்,நடிகர் சிம்பு மற்றும் படத்தின் இயக்குனர் சுசீந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்