தனக்கு தானே பஞ்ச் டயலாக் எழுதிய ரஜினி - "அண்ணாத்தே" படத்தில் வெளிவரும் என படகுழு தகவல்

அண்ணாத்தே படத்தில் நடிகர் ரஜினியின் கதாபாத்திரத்திற்கு தேவையான பஞ்ச் டயலாக்குகளை அவரே எழுதி உள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது.

Update: 2020-09-25 04:58 GMT
அண்ணாத்தே படத்தில் நடிகர் ரஜினியின் கதாபாத்திரத்திற்கு தேவையான பஞ்ச் டயலாக்குகளை அவரே எழுதி உள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்வுக்கு பின் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் படத்தில் தன் கதாபாத்திறத்திற்கு தேவையான பஞ்ச் டயலாக்குகளை ரஜினியே எழுதி இருப்பதாகவும் அந்த வசனங்களை படத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்தே படத்தில் நடிகர் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பூ, சூரி ஆகியோர் நடத்து வருகின்றனர்.      

Tags:    

மேலும் செய்திகள்