"தனது பெயரை பயன்படுத்தி தொழில் சம்பந்தமாக அணுகினால் ஏமாற வேண்டாம்" - அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜித்குமார் தரப்பு
தனது பெயரை பயன்படுத்தி தொழில் சம்பந்தமாக யாரும் அணுகினால் ஏமாற வேண்டாம் என நடிகர் அஜித் குமார் தரப்பு தெரிவித்துள்ளது.
தனது பெயரை பயன்படுத்தி தொழில் சம்பந்தமாக யாரும் அணுகினால் ஏமாற வேண்டாம் என நடிகர் அஜித் குமார் தரப்பு தெரிவித்துள்ளது. அஜித்திடம் வேலை பார்த்தவர்கள் அவரது பெயரை தவறாக பயன்படுத்துவதாக தகவல்கள் வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வர்த்தக ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ யாரும் ஏமாற்றப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.