நடிகர் மோகன்லால் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு, பிரபல நடிகர் மோகன்லால் 50 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்.

Update: 2020-04-10 01:42 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு, பிரபல நடிகர் மோகன்லால்  50 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், அனைவருக்கும் இது சோதனையான காலம் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், தீவிரமாக பாடுபட்டு வரும் கேரள முதலமைச்சரை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பினரயி விஜயனின் பணிகள் வரலாற்றில் இடம் பிடிக்கும் எனவும் மோகன்லால் புகழ்ந்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்