சிங்கம்பட்டி சமஸ்தானம் பற்றி அவதூறு எனும் வழக்கு: இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

அவன் இவன் திரைப்படத்தில் சிங்கபட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா நேரில் ஆஜரானார்.

Update: 2018-12-20 19:08 GMT
அவன் இவன் திரைப்படத்தில் சிங்கபட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா நேரில் ஆஜரானார். இதே வழக்கில், நடிகர் ஆர்யா மீதான பிடியாணை மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு நகலை, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.  ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி உயர் நீதிமன்றம் மூலம் நேரடியாக  வரும் ஆணைகள் மட்டுமே ஏற்றுகொள்ளபடும் என கூறி, வரும் 4ம் தேதி நடக்கும் விசாரணையில் ஆர்யாவும் ஆஜராக கோரி அறிவுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்