பழிக்கு பழி... ஈரானில் 9 பாகிஸ்தானியர்கள் படுகொலை - போர் மூளும் அபாயம்..!

x

ஈரானில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். ஈரானின் சிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணம், சராவன் நகரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததாகவும் 3 பேர் காயமடைந்ததாகவும், டெஹ்ரானுக்கான பாகிஸ்தான் தூதர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதல் தான் என்றும், இதுகுறித்து ஈரான் அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டுமெனவும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்