பேரணியில் வெடித்த குண்டு...பலியான 4 பேர், 7 பேரின் நிலை...உச்சகட்ட பரபரப்பில் பாகிஸ்தான்

x

பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தொண்டர்கள் நடத்திய மாபெரும் பேரணியின்போது பைக்கில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரசு ரகசிய ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது... இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்