அழைப்பு விடுத்த பாகிஸ்தான்.. செவிசாய்த்த பிசிசிஐ? | BCCI | pakistan

x

பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷாவை, ஆசியக்கோப்பை தொடரின் தொடக்கப்போட்டியை காண வருமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் அழைப்பை பிசிசிஐ ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ தலைவர் ரோஹர் பின்னி மற்றும் துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 5-ஆம் தேதி லாகூரில் நடைபெறும், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியை இருவரும் நேரில் காண உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்