"பெண்கள் இதை செய்தால் பொதுவில் கல்லெறிந்து, கசையால் அடித்து கொல்வோம்" - தலிபான்கள் கொடூர அறிவிப்பு

x

ஆப்கானிஸ்தானில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்...

தலிபான்களின் உயர் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா, விபச்சாரத்தில் ஈடுபட்டால் பெண்கள் கல்லெறிந்து கொல்லப்படும் நடைமுறையை மீண்டும் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு மகளிர் உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம் என்றும், குற்றம் செய்யும் பெண்களை பொது இடங்களில் கசையால் அடித்தும் கல்லெறிந்தும் கொல்வோம் என்று அகுந்த்சாடா தெரிவித்துள்ளார்... மேலும் தலிபான்களின் பணி காபூலைக் கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை... அது இப்போதுதான் தொடங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்