அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் - 320 பேர் பலி..குலுங்கிய ஆப்கானிஸ்தான்

x

ஆப்கானிஸ்தானில் அடுத்த‌டுத்து 6 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 320 பேர் உயிரிழந்துள்ளனர். ஹெரத் நகர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0 மற்றும 4.7 அலகுகளாக பதிவாகியுள்ளன. கட்ட‌டங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சமடைந்தனர். பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த‌தால், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். இதுவரை 320 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்