பாகிஸ்தானில் கோர ரயில் விபத்து... 30 பேர் உயிரிழந்த சோகம்

x

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில், சஹாரா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் அருகே, ஹசாரா எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 30 பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்