அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறை - தனி மனித தாக்குதலுக்கு பலியாகும் உயிர்கள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறை - தனி மனித தாக்குதலுக்கு பலியாகும் உயிர்கள்
x
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள மதுபான கடையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக நேற்று ஒரே நாளில் டெக்சாஸ் மற்றும் விஸ்கொன்சின் மாகாணங்களில் இரு வேறு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் உயிரிழந்திருந்தனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும்10  பயங்கர துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்