முள்ளி வாய்க்கால் நினைவிடம் இடிப்பு - பல்கலைக்கழகம் முன் மாணவர்கள் போராட்டம்

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால் போராட்டம் வெடித்துள்ளது.
முள்ளி வாய்க்கால் நினைவிடம் இடிப்பு - பல்கலைக்கழகம் முன் மாணவர்கள் போராட்டம்
x
இலங்கை இறுதிக்கட்ட போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மக்கள் மற்றும் மாணவர்களின் நினைவாக யாழ்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இரண்டரை ஆண்டுகளுக்கு பின் இந்த நினைவிடத்தை இலங்கை அரசு இரவோடு இரவாக இடித்துதள்ளியுள்ளது. இதை அறிந்த மாணவர்களும், அரசியல் தலைவர்களும் பல்கலைக்கழகம் முன் திறண்டு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் பல்கலைக்கழக வாயிலில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி உள்ளே சென்ற சில மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்