அடுத்தடுத்த புயல் தாக்குதல்கள் - தத்தளிக்கும் மத்திய அமெரிக்க நாடுகள்

அடுத்தடுத்த புயல் தாக்குதல்களால் மத்திய அமெரிக்க நாடுகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
அடுத்தடுத்த புயல் தாக்குதல்கள் - தத்தளிக்கும் மத்திய அமெரிக்க நாடுகள்
x
அடுத்தடுத்த புயல் தாக்குதல்களால் மத்திய அமெரிக்க நாடுகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு 'ஈடா' என்ற புயல் மத்திய அமெரிக்க நாடுகளை கடுமையாக தாக்கியது. அந்த பாதிப்பிலிருந்து இன்னும் பல கிராமங்கள் வெளிவராத நிலையில்,  தற்போது  நிகரகுவா பகுதியை ஐயோடா புயல் கடுமையாக தாக்கி உள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் இதுவரை 71,000 க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டிலுள்ள பல ஆறுகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் நிரம்பி வழிவதால் தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்