"3 அல்லது 4 வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து" - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதி

இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து தயாராகி விடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
3 அல்லது 4 வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதி
x
இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து தயாராகி விடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், பிரசாரம், நேர்காணல் என பம்பரமாக டிரம்ப் சுழன்று கொண்டிருக்கிறார். தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த டிரம்ப் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், மூன்று அல்லது நான்கு வாரங்களில் தயாராகிவிடும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் முந்தைய அரசில் இது போன்ற சூழல் நிலவி இருந்தால் மருந்து கண்டுபிடிக்க வருட கணக்கு ஆகி இருக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தலுக்கு முன்னர் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு கிடைத்து விடும் என்றும் அவர் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்