பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6 புள்ளி ஆறாக பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வீடுகள் குலுங்கின. சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடல் பகுதியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story