இலங்கை தாதா லொக்காவின் கூட்டாளியும் பலி - போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு

இலங்கையில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் அங்கொடா லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க உயிரிழந்தார்.
இலங்கை தாதா லொக்காவின் கூட்டாளியும் பலி - போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு
x
இலங்கை தாதா அங்கொடா லொக்கா தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் அவரது கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். அங்கொடா லொக்காவின் கூட்டாளியான சோல்ட்டா என்றழைக்கப்படும் அசித்த ஹேமதிலக்கவை போலீசார் தேடி வந்தனர். இலங்கையில் முல்லேரியா வெலிவிட்ட பகுதியில் இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்த போது அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு அவர் தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அசித்த ஹேமதிலக்க உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்