வாகனத்தை வகுப்பறையாக மாற்றிய ஆசிரியை - ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி
மெக்சிகோவில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வீடு தேடி சென்று ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி வருகிறார்.
மெக்சிகோவில், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வீடு தேடி சென்று ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அங்கு மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், இணைய தள வசதி இல்லாத, ஆட்டிசம் என்னும் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமது சொந்த வாகனத்திலேயே சிறு வகுப்பறை அமைத்து பயிற்சி அளிக்கும் ஆசிரியைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story