கொரோனா எதிரொலி : தற்காலிக மருத்துவமனை கட்ட பாகிஸ்தானுக்கு சீனா உதவி

கொரோனா தாக்குதல் எதிரொலியாக, தற்காலிக மருத்துவமனையை கட்ட, பாகிஸ்தானுக்கு உதவ, சீனா முன்வந்துள்ளது.
கொரோனா எதிரொலி : தற்காலிக மருத்துவமனை கட்ட பாகிஸ்தானுக்கு சீனா உதவி
x
கொரோனா தாக்குதல் எதிரொலியாக, தற்காலிக மருத்துவமனையை கட்ட, பாகிஸ்தானுக்கு உதவ, சீனா முன்வந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இதுவரை கொரோனால் ஆயிரத்து 106 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து விதமான மருத்துவ உதவிகளையும் செய்ய சீனா முன் வந்துள்ளது. இதை அந்நாட்டின், சர்வதேச மேம்பாட்டு கூட்டுறவு முகமையில் துணைத்தலைவர் அறிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்