"மக்களின் பாதுகாப்பிற்காகவே ஊரடங்கு உத்தரவு அமல்" - இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச
இலங்கை மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தே, ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தே, ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொரோனா அச்சத்தை தொடர்ந்து நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய உரையில், எந்த சந்தர்ப்பத்திலும் நோயாளர்கள் பற்றியும், நோயின் தாக்கம் குறித்த தகவல்களை அரசு மூடிமறைக்காது எனக் குறிப்பிட்டார். இலங்கையில் நடைபெற்ற பயங்கரமான போர்ச் சூழலிலும் கூட, தற்போதுபோல், ஊடரங்கு உத்தரவு அமுல் படுத்தவில்லை என்றும் கூறினார்.
Next Story