'பயணத்தை முன் நோக்கி தொடர ஒத்துழைப்பு வழங்குங்கள்" - தமிழ் மக்களுக்கு இலங்கை அதிபர் அழைப்பு

இலங்கையில் காணாமல் போனவர்கள் உயிரிழந்து விட்டதாகவும், இந்தப் பிரச்சினையை மறந்து அனைவரும் தம்முடன் இணைந்து பயணிக்குமாறும் தமிழ் மக்களுக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
பயணத்தை முன் நோக்கி தொடர ஒத்துழைப்பு வழங்குங்கள் - தமிழ் மக்களுக்கு இலங்கை அதிபர் அழைப்பு
x
இலங்கையில் காணாமல் போனவர்கள் உயிரிழந்து விட்டதாகவும், இந்தப் பிரச்சினையை மறந்து அனைவரும் தம்முடன் இணைந்து பயணிக்குமாறும் தமிழ் மக்களுக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போரின் போது, படையினரது உடல்கள் மீட்கப்படாத பட்சத்தில், அவர்கள் காணாமல் போனவர்கள் என்றே நினைப்பதாக கூறினார். பொதுமக்களில் சிலர் காணாமல் போனதாகக் கூறிய நிலையில், அவர்கள் கனடாவில் தோன்றிய சம்பவமும் நடந்ததாக  கூறினார். ஆகவே காணாமல் போனோர் விஷயத்தை மறந்துவிட்டு, பயணத்தை முன் நோக்கி தொடர ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.



Next Story

மேலும் செய்திகள்