இலங்கை குண்டுவெடிப்பு : இலங்கை பிரதமர் ரனில் அவசர ஆலோசனை
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார். இதில், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையே டுவிட்டரில் பதிவிட்டுள்ள ரனில், நாட்டு மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் பொய் செய்திகளை நம்ப வேண்டார் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story