புல்வாமா தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம்
x
இது தொடர்பாக கூடிய கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெய்ஷ் - இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள இந்த கண்டிக்கத்தக்க தாக்குதலுக்கு நிதி உதவி அளித்தவர்கள் மற்றும்  ஏற்பாடு செய்தவர்கள் அனைவரையும் நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் பெயர் ஐ.நா. வின் அறிக்கையில் இடம்பெறுவதற்கும், இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் என்று குறிப்பிடுவதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்ததாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு உதவியாக இருந்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற குறிப்பிடப்பட்டதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்