பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைவோம் : தென்கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு

ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது
பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைவோம் : தென்கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு
x
தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகைக்கு இன்று சென்று அதிபர் மூன் ஜே இன் ஐ சந்தித்து பேசினார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  இருநாடுகள் இடையே பாதுகாப்பு  உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வுஒப்பந்தங்கள்கையெழுத்தானது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர்மோடி,தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் நட்புறவில் பாதுகாப்புத் துறை முக்கிய பங்கு வகிப்பதாகவும், தென்கொரிய தொழில்நுட்பத்தில் உருவான கே - 9 வஜ்ரா ஆர்டிலரி துப்பாக்கி ரகம் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதே இதற்கு சான்று என்றும் குறிப்பிட்டார்.  தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளில் தென்கொரியா துணையாகஇருப்பதற்குநன்றிதெரிவித்துக்கொண்டஅவர்,இன்றுகையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்த நடவடிக்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்