உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி : பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு

டெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி : பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு
x
டெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை தொடங்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக்கில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில் புல்வாமா தாக்குதலை அடுத்து , பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் தலையிட்டு விசா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் விசா கிடைக்கவில்லை என்றால், இந்த தொடருக்கு வழங்கப்பட்டுள்ள ஒலிம்பிக் தகுதிக்கான அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்