"வாய்ப்புகளுக்கான நிலமாக மாறும் இந்தியா" - தென்கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு

தென்கொரியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி,வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறி உள்ளதாகவும்,இந்தியாவின் கருத்துக்கு ஒத்துப்போக்கூடிய கூட்டாளிகளில் தென்கொரியாவும் ஒன்று என்றார்.
வாய்ப்புகளுக்கான நிலமாக மாறும் இந்தியா - தென்கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு
x
தென்கொரியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறி உள்ளதாகவும், இந்தியாவின் கருத்துக்கு ஒத்துப்போக்கூடிய கூட்டாளிகளில் தென்கொரியாவும் ஒன்று என்றார். இருநாட்டு வர்த்தக மற்றும் கலாச்சார உறவை பலப்படுத்த இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தென்கொரியா சென்றுள்ளார். அங்கு, முதலீட்டாளர்கள் மத்தியில்  பேசிய அவர், இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது என்றார். முன்பு விவசாயத்தை நம்பிய பொருளாதாரமாக அறியப்பட்ட இந்தியா தற்போது, தொழில் மற்றும் சேவை துறைகளுக்கான நாடாக அறியப்படுகிறது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்