பிரெக்ஸிட் விவகாரம் - கருத்துக்கணிப்பில் 'திடீர்' திருப்பம்

பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தில் நடந்த கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரெக்ஸிட் விவகாரம் - கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம்
x
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 14-ந் தேதி ஒரு தீர்மானம் வர உள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்றவர்களில் 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். கருத்துக் கணிப்பில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பர்மிங்ஹாம் பி.எம்.ஜி. ரிசர்ச் அமைப்பு நடத்திய இந்த கருத்துக் கணிப்பில், 49 சதவீத மக்கள், ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்