பொலிவியாவில் அதிகரிக்கும் விபத்துகள் : பெருகும் உயிரிழப்புகள்

பொலிவியாவில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற மூன்று பேருந்து விபத்துகளில் 35 பேர் உயிரிழந்தனர்.
பொலிவியாவில் அதிகரிக்கும் விபத்துகள் : பெருகும் உயிரிழப்புகள்
x
பொலிவியாவில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற மூன்று பேருந்து விபத்துகளில் 35 பேர் உயிரிழந்தனர். சான்டா குரூஸ் நகரில் டயர் வெடித்து பேருந்து தீ பற்றி எரிந்ததில்,  பயணிகள் உயிர் பிழைத்தனர். ஆண்டிஸ் மலைப்பகுதியில், பேருந்து  பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்து மற்றும் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர், 37 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மலைப்பகுதிகளில் உள்ள வளைவுகளில் வாகனத்தை திருப்பும் போது பெரும்பாலும் பேருந்துகள் விபத்துக்குள்ளாவதாகவும், இதனால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்