பதவியேற்ற சில மணி நேரங்களில் கொல்லப்பட்ட மெக்சிகோ மேயர்

மெக்சிகோவில், மேயர் ஒருவர், பதவியேற்ற சில மணி நேரங்களிலே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பதவியேற்ற சில மணி நேரங்களில் கொல்லப்பட்ட மெக்சிகோ மேயர்
x
மெக்சிகோவில், மேயர் ஒருவர், பதவியேற்ற சில மணி நேரங்களிலே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அலெஜாண்டரோ என்பவர், தெற்கு மெக்சிகோவில் உள்ள ஆக்சகா என்ற பகுதியின் மேயராக, கடந்த ஒன்றாம் தேதி பதவியேற்றார். அவர், பதவியேற்ற சில மணி நேரங்களில், கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அங்குள்ள அரங்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஒருவர், மேயரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். இந்த தாக்குதலில், மேயருடன் இருந்த மற்றொருவரும் கொல்லப்பட்டார். மெக்சிகோவில், கடந்த 2017 ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 175 அரசியல்வாதிகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

Next Story

மேலும் செய்திகள்