மீண்டும் பிரதமர் ஆகிறார், ரணில் விக்ரமசிங்கே
இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தலைநகர் கொழும்பில் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ராஜபக்சே தமது ராஜினாமா கடிதத்தை அதிபர் மைத்திரி பால ஸ்ரீ சேனாவுக்கு அனுப்பி வைத்தார். இதனிடையே, நாளை, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்பார் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. அதேநேரம், இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா, வருகிற 17 ம் தேதிக்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.
Next Story