கார் வெடிகுண்டு தாக்குதல் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

சோமாலியாவில் பயங்கர கார் வெடிகுண்டு தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தனர்.
கார் வெடிகுண்டு தாக்குதல் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு
x
சோமாலியாவில் பயங்கர கார் வெடிகுண்டு தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தனர்.  மொகதிசு நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் வெளியே நான்கு கார்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க வைக்கப்பட்டன. மூன்று கார்கள் அடுத்தடுத்து வெடித்த நிலையில், மீட்புப்பணியில் போலீஸார்,   பொதுமக்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து,  நான்காவது கார் குண்டும் வெடித்ததால், பலர் உடல் சிதறி பலியாகினர்.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 53 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹோட்டலில் தங்கும் அரசு அதிகாரிகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு "அல் ஷபாப்" எனும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர் குழு பொறுப்பேற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்